கோலாலம்பூர், நவ 10- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 6,243 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 5,403 ஆகப் பதிவானது. இத்தகவலை சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 22 ஆயிரத்து 492 ஆக உயர்வு கண்டுள்ளது.