ஷா ஆலம், 21 நவ: கம்போங் கெனாங்கன் பூச்சோங்கில் உள்ள சைம் யுஇபி நீர்க் குளத்தின் பிரதான விநியோகக் குழாயில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தடைப்பட்ட நீர் விநியோகம், யுஎஸ்ஜே 1 முதல் யுஎஸ்ஜே 27 வரையிலான பகுதிக்கு இன்று அதிகாலை 2 மணிக்கு நீர் விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது. பயனிட்டாளர் இருப்பிடத்தின் தூரம் மற்றும் நீர் வழங்கல் விநியோக அமைப்பில் நீர் அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து மீட்பு காலம் மாறுபடும்.
“குளத்தில் மேற்கொள்ளப்பட்ட நீரின் தரப் பரிசோதனையானது மலேசிய சுகாதார அமைச்சகத்தின் தரத்தை பூர்த்தி செய்ததை அடுத்து, இன்று அதிகாலை 2 மணிக்கு நீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழங்கத் தொடங்கியது.
“ஆயர் சிலாங்கூர் பயனிட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் புரிந்துகொள்கிறது மற்றும் நீர் விநியோகத்தை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றும்” என்று அந்நிறுவனம் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
Facebook, Twitter, Instagram மற்றும் www.airselangor.com என்ற இணையதளம் உள்ளிட்ட அனைத்து ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலமாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கப்படும். ஏதேனும் கேள்விகள் மற்றும் புகார்களை சிலாங்கூர் நீர் தொடர்பு மையத்தில் 15300 அல்லது சிலாங்கூர் வாட்டர் விண்ணப்பத்தில் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.