ஷா ஆலம், நவ 25- நாட்டில் இன்று கோவிட்- 19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை இன்று 6,144 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 5,755 ஆக இருந்தது.
இந்த புதிய நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 8 ஆயிரத்து 979 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.