27.3 லட்சம் இளையோருக்கு தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டது

27.3 லட்சம் இளையோருக்கு தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டது

 

கோலாலம்பூர், டிச 18- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 86.9 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 33 ஆயிரத்து 768 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 90 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 32 ஆயிரத்து 684 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நேற்று இரவு 11.59 மணி வரை பதிவான எண்ணிக்கை இதுவாகும் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, நாட்டிலுள்ள பெரியவர்களில் 97.4 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 201 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 98.7 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 31 லட்சத்து 16 ஆயிரத்து 934 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 160,974 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 3,088 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 4,663 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர். எஞ்சிய 153,223 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 57 லட்சத்து 28 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட ஊக்கத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 44 லட்சத்து 30 ஆயிரத்து 656 ஆகும்.


Pengarang :