சபாக் பெர்ணமில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டு விநியோகம்

ஷா ஆலம், பிப் 25- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட நாற்பதுக்கும்  மேற்பட்ட மாணவர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டு வழங்கப்பட்டது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்கும் நோக்கில் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் இந்த பற்றுச் சீட்டுகளை வழங்குவதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார். கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சபாக் பெர்ணம் மாவட்டம் அதிகம் பாதிக்கப்படாத போதிலும் மாநில அரசு அப்பகுதி மக்களையும் புறக்கணிக்காமல் உதவி வழங்குகிறது என்று அவர் சொன்னார். நாங்கள் அனைவரின் நலனிலும் கவனம் செலுத்துவதோடு சிரமத்தில் இருப்போருக்கும் உதவ விரும்புகிறோம் என்றார் அவர். இம்மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :