ALAM SEKITAR & CUACAHEALTHNATIONALPENDIDIKAN

12.3 மில்லியன் சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 20: சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதினரில் மொத்தம் 1,239,194 பேர் அல்லது 34.9 விழுக்காட்டினர் நேற்று கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில் நேற்று, 12 முதல் 17 வயதுடைய இளையோரில் மொத்தம் 28 லட்சத்து 42 ஆயிரத்து 480 பேர் அல்லது 91.4 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 41 ஆயிரத்து 159 பேர் அல்லது 94.6 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நாட்டில் மொத்தம் 1 கோடியே 54 லட்சத்து 46 ஆயிரத்து 895 பேர் அல்லது 65.7 விழுக்காட்டினர் கோவிட்-19 இன் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர் மற்றும் மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 41 ஆயிரத்து 756 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

தினசரித் தடுப்பூசிகள் நேற்று 18,273 முதல் டோஸ்கள், 1,709 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 20,436 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 40,418 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, இது தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தத் தடுப்பூசி எண்ணிக்கை 6 கோடியே 84 லட்சத்து 18 ஆயிரத்து 688 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று கோவிட்-19 காரணமாக 85 இறப்புகள் பதிவாகியுள்ளன.


Pengarang :