ஷா ஆலம், மார்ச் 23– அனைத்துலக புவி தினத்தை முன்னிட்டு 3ஆர் மறுசுழற்சி தொடர்பான குறும்படப் போட்டியை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.எஸ்.) ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியின் வெற்றியாளருக்கு 2,000 வெள்ளி மதிப்புள்ள விவேக கைப்பேசி பரிசாக வழங்கப்படும்.
வரும் வெள்ளிக் கிழமை தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் சிலாங்கூரில் வசிக்கும் உள்நாட்டினர் கலந்து கொள்ளலாம் என்று நகராண்மைக் கழகம் கூறியது.
மேற்கண்ட படத்தில் காணப்படும் கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் போட்டியாளர்கள் விண்ணப்ப பாரங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனது பேஸ்புக் பதிவில் அது தெரிவித்தது.
இப்போட்டியின் முதன்மை வெற்றியாளருக்கு சம்சுங் S20 FE விவேக கைப்பேசியும் இரண்டாம் இடத்தை பெறுபவருக்கு ஷியோமி 1எஸ் ரக மின்சார ஸ்கூட்டரும் மூன்றாம் வெற்றியாளருக்கு Fossil Gen 5 விவேக கைக்கடிகாரமும் வழங்கப்படும்.
நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தைப் பெறுவோருக்கு RealME s கைக்கடிகாரம் வழங்கப்படும். அடுத்த நிலையில் தேர்வாகும் 20 போட்டியாளர்களுக்கு தலா 100 வெள்ளி ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.