கோலாலம்பூர், மார்ச் 26: சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) 2021 தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 5 முதல் மே 19 வரை நடைபெறும்.
இரண்டாவது அமர்வுத் தேர்வில் பேச்சுத் தேர்வு மற்றும் கேட்கும் தேர்வு (மலாய் மற்றும் ஆங்கிலம்), நடைமுறை அறிவியல் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகியவை அடங்கும்.
SPM 2021 தேர்வின் இரண்டாவது அமர்வு பிப்ரவரி 8 முதல் மார்ச் 29 வரை நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்க முடியாத விண்ணப்பதாரர்களுக்காக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ்பிஎம் 2021 இரண்டாவது அமர்வில் ஈடுபட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் ஏப்ரல் 1, 2022 முதல் நியமிக்கப்பட்ட தேர்வு மையத் தகவல், தேதி, நேரம், குறியீடு மற்றும் தேர்வுத் தாள்கள் அடங்கிய தேர்வுப் பதிவு அறிக்கையைச் சரிபார்த்து, உறுதிப்படுத்தி அச்சிடுமாறு தேர்வு வாரியம் நினைவுபடுத்துகிறது.
அனைத்து தகவல்களையும் https://elp.moe.gov.my என்ற இணைப்பின் மூலமாகவோ அல்லது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யக்கூடிய e-Lembaga Peperiksaan மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவோ அணுகலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அமர்விற்கான SPM 2021 தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றையும் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://lp.moe.gov.my யில் இருந்து ஏப்ரல் 1 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் அச்சிடப்பட்ட பரீட்சை பதிவு அறிக்கைகளை பரீட்சை நிலையத்திற்கு கொண்டு வருமாறும் அமைச்சு நினைவூட்டியுள்ளது.