நாட்டின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது

 கோலாலம்பூர், மே 4- நாட்டிலுள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து  சீராகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கூறியது. நோன்புப் பெருநாளின் மூன்றாவது நாளான இன்று சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக அது தனது டிவிட்டர் பதிவில்   குறிப்பிட்டுள்ளது.

காலை 10.00 மணி நிலவரப்படி, நெடுஞ்சாலைகளின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் இரு தடங்களிலும் டோல் சாவடிகளிலும் போக்குவரத்து இன்னும் சீராக இருப்பதாக அது மேலும் தெரிவித்தது. மேலும், மலேசியா-சிங்கப்பூர் வழித்தடத்தின் இரு திசைகளிலும் ஜோகூர் பாலத்திலும்  போக்குவரத்து சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனமோட்டிகள், குறிப்பாக கிழக்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோர் கே.எல்.- காராக் நெடுஞ்சாலை மற்றும் கிழக்குக் கரை நெடுஞ்சாலைக்கான பயண நேர  அட்டவணைகளைப் பின்பற்றுமாறு  அறிவுறுத்தப்படுகின்றனர.


Pengarang :