நான்கு வயது சிறுமியை துன்புறுத்தியதாக தம்பதியினர் கைது செய்யப் பட்டுள்ளனர்

கோலாலம்பூர், ஜூலை 22 – நான்கு வயது சிறுமி துன்புறுத்தப்பட்ட வழக்கு தொடர்பாக, இங்குள்ள உலு லங்காட்டின் பெரானாங்கில், ஒரு ஆண் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஜெய்த் ஹாசன் கூறுகையில், துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து காவல்துறைக்கு புகார் வந்ததை அடுத்து, இன்று அதிகாலை 2.30 மணியளவில் தம்பதியினர் அவர்களது வீட்டில் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியை ஹேங்கர் மற்றும் துடைப்பம் கொண்டு அடித்ததாகவும், லைட்டரால் சூடு வைத்ததாகவும், மேலும் வாந்தி எடுக்கும் வரை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்ததாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் சாப்பிட மறுத்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ” என்று முகமது ஜைட் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 


Pengarang :