ANTARABANGSA

எலிசபெத் அரசியார் காலமானார்

பால்மோரல், ஸ்காட்லாந்து, செப் 9 – பிரிட்டனை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியும் எழுபது ஆண்டுகளாக  நாட்டை வழி நடத்தியவருமான எலிசபெத் அரசியார் நேற்று காலமானார். அன்னாருக்கு வயது 96.

அரசியாரின் மறைவு குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று  வெளியிட்டது.

அரசிமார் இன்று பிற்பகல் பால்மோரலில் அமைதியாக தனது இறுதி மூச்சை விட்டார்  என்று பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்வழி அரசியாரின் மூத்த புதல்வர் சார்ல்ஸ் (வயது 73) இயல்பாக இங்கிலாந்தின் மன்னராகவும் ஆஸ்திரேலியா,கனடா, நியுசிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் தலைவராகவும்  ஆகிறார்.


Pengarang :