செலாயாங்கில் நடைபெற்ற இல்திஸாம் சிலாங்கூர் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோம்பாக், அக் 11- இங்குள்ள கம்போங் பாரு செலாயாங்கில் நேற்றிரவு நடைபெற்ற இல்திஸாம் சிலாங்கூர் பயண பெருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து பயனடைந்தனர்.

இந்த விழாவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைத்தார். தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் மற்றும் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜி கின் ஆகியோரும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்காக சாத்தே, ரொட்டி ஜோன், நாசி லெமாக், முர்த்தாபாக், மீ கோரேங் உள்ளிட்ட உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக புளுஸ் கேங், பேகியோ, இஸ்மா சானி போன்ற இசைக்குழுக்களின் படைப்புகளும் படைக்கப்பட்டன.

ஐ.பி.ஆர். எனப்படும் பெடுலி ராக்யாட் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 44  திட்டங்களுடன் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் எனும் பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Pengarang :