ஒற்றுமை உணர்வில் ஒளியின் சின்னம் தொடரந்து பிரகாசிக்கும்- சுல்தான் தம்பதியரின் தீபாவளி வாழ்த்து

ஷா ஆலம், அக் 24- தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாண்டு தீப ஒளித் திருநாள் மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒருமைப்பாடு ஆகிய உணர்வுகளுடன் கொண்டாடப்படும் எனத் தாங்கள் நம்புவதாக அவர்கள் கூறினர்.

தீபாவளி பண்டிகையின் அடையாளமாக திகழும் ஒளிப் பிரவாகம் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களின் மத்தியிலும் ஒற்றுமை உணர்வை பிரகாசிக்கச் செய்ய பிரார்த்திக்கிறோம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்று அரச பேஸ்புக் பக்கம் வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சுல்தான் தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.


Pengarang :