MEDIA STATEMENTPENDIDIKAN

அம்பாங்கில் கல்வி வாய்ப்புகள் மேம்படுத்தப்படும் 

அம்பாங், நவம்பர்.15-  அம்பாங் நாடாளுமன்ற தொகுதியில் மாணவர்களுக்கான  கல்வி வாய்ப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரோட்ஸியா இஸ்மாயில் கூறினார்.
பள்ளி மாணவர்கள் உட்பட பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் வரைக்குமான கல்வி தரம் உயர்த்தப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு  கல்வி மட்டுமே சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தரும். இன்றைய விஞ்ஞான  உலகில் கல்வியின் அவசியத்தை மாணவர்கள் மத்தியில் தாம் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாக  அம்பாங்கில் செயல்படும் பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுடனான சந்திப்பில் அவர் சொன்னார்.
அதோடு, ஏற்கனவே  இருக்கக் கூடிய  கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என பள்ளி பிரதிநிதிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
ஆர்.பார்த்திபன்

Pengarang :