ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூரில் பள்ளிகளுக்கான உதவி நிதி வெ. 2.65 கோடியாக அதிகரிப்பு

ஷா ஆலம், நவ 26- சிலாங்கூரிலுள்ளப் பள்ளிகளுக்கு உதவி நிதி அடுத்தாண்டில் 2 கோடியே 65 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் நிதிக் கோரிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பல பள்ளிகள் பாதிக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதாக மாநில சட்டமன்றத்தில் இன்று 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.


Pengarang :