ALAM SEKITAR & CUACASELANGOR

சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்தது

ஷா ஆலம், நவ 26- சிலாங்கூரில் நேற்றிரவு நிலவரப்படி வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட 298 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம்
நாடியுள்ளனர்.

இம்மாநிலத்தில் ஒரு மாவட்டம் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள
நிலையில் அங்கு நான்கு தற்காலிக துயர் துடைப்பு மையங்கள்
செயல்பட்டு வருவதாக மலேசிய பொது தற்காப்புத் துறை கூறியது.
பேராக் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் உள்ள நான்கு துயர் துடைப்பு
மையங்களில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 275 பேர் நிவாரண மையங்களில்
தங்கியுள்ளனர்.

ஜோகூர் மாநிலத்திலும் வெள்ள நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
இங்கு 12 குடும்பங்களைச் சேர்ந்த 95 பேர் துயர் துடைப்பு மையங்களில்
அடைக்கலம் நாடியுள்ளனர்.

நேற்று மாலை 4.00 மணி நிலவரப்படி சிலாகூரில் 103 குடும்பங்களைச்
சேர்ந்த 321 பேர் தற்காலிக மையங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.


Pengarang :