NATIONAL

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் உறுதி – அந்தோனி லோக்

ஷா ஆலம், டிச 6: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் அவர்கள்,  கிளானா ஜெயாவில் இலகு ரயில் போக்குவரத்து (எல்ஆர்டி) சேவையின் உண்மை நிலையைப் பார்க்கக் களத்திற்குச் சென்றுள்ளார்.

அவரது முகநூலில் பகிர்ந்ததன் மூலம்,  தொப்பி மற்றும் கருப்பு முகக்கவசம் அணிந்திருந்த அவர், மாலை மணி  5 முதல் இரவு மணி 7 வரை பொது போக்குவரத்து கூட்டமாக இருக்கும் வேளையில் இலகு ரயிலில் பயணித்துள்ளார். “ரயிலில் மிகவும் நெரிசலான சூழ்நிலை உள்ளது, நிச்சயமாக இது பயணிகளுக்கு வசதியாக இல்லை,“ என குறிப்பிட்டார்.

நான் பொதுவசதியை வழிநடத்தும் துறையினருக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்கவில்லை காரணம் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் நிலையைச் சாதாரண பயணிகளைப் போல நானே அனுபவிக்க விரும்பினேன்.

“எல்ஆர்டி பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நான் புரிந்துகொள்கிறேன். எங்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க இந்த வாரம் பொதுவசதி உயர் நிர்வாகத்துடன் ஒரு சந்திப்பை நடத்துவேன்,” என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :