ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூரில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது மெட்மலேசியா

ஷா ஆலம், டிச.23: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) சிலாங்கூரில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்யும் என்றும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் நாளை காலையில் மழையும், மதியம் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மழை இருக்காது என்று தேசியப் பேரிடர் மேலாண்மை அதன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

பேராக், கிளந்தான், திரங்கானு, நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் இன்று காலை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

“கிளந்தான், திரங்கானு, பேராக், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பேராக், நெகிரி செம்பிலான், பகாங், ஜோகூர் மற்றும் சபாவில் பல இடங்களில் இரவில் மழை பெய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

சனிக்கிழமை வானிலை முன்னறிவிப்பு சரவாக்கில் பல பகுதிகளில் மழையும், சபாவில் காலையில் இடியுடன் கூடிய மழையும், பிற்பகலில் பேராக், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சபாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் மற்றும் சரவாக்கில் பல இடங்களில் மழையும் பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர் மற்றும் சரவாக்கில் சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும், சபாவில் சில இடங்களில் காலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :