SELANGORYB ACTIVITIES

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கோல சிலாங்கூர், டிச 24- கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறார்கள் மற்றும் மூத்த குடிமக்களை மகிழ்விக்கும் வகையில் விருந்துடன் கூடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கடந்த 20ஆம் தேதி இங்கு நடத்தப்பட்டது.

இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வை புக்கிட் மெலாவத்தி தொகுதிக்கான இந்திய சமூகத் தலைவர் கலைக்குமார் தொகுதி சேவை மையத்தின் ஆதரவுடன் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.

கோல சிலாங்கூர் வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வுக்கு புக்கிட் மெலாவத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூயாய்ரிய ஜூல்கிப்ளி தலைமை தாங்கினார். 

விருந்து மற்றும் ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றுவட்டார சமூகத் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வின் சிறப்பு அங்கமாக வருகையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நாம் இனம் மற்றும் மதத்தால் வேறுபட்டிருந்த போதிலும் பன்முகத் தன்மை கொண்ட இத்தகைய விழாக்களை நல்லிணக்கத்தோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடுவது பெருமிதம் தரக்கூடியதாக உள்ளது என ஜூவாய்ரியா குறிப்பிட்டார்.


Pengarang :