NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி – டத்தோ மந்திரி புசார்

ஷா ஆலம், டிச 25: பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பாராட்டு மற்றும் நன்றியைத் டத்தோ மந்திரி புசார் தெரிவித்து கொண்டார்.

“பத்தாங் காலி நிலச்சரிவு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

“உங்கள் சேவைகளும் தியாகங்களும் எல்லையற்றவை. கடவுள் உங்களை எப்போதும் பாதுகாக்கட்டும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.

இம்மீட்பு நடவடிக்கையானது ராயல் மலேசியன் போலீஸ், மலேசிய ஆயுதப் படைகள், மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய சிறப்பு தேடல் மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்) மற்றும் குடிமைத் தற்காப்புப் படை (APM) ஆகிய ஐந்து முக்கிய துறைகளின் ஒத்துழைப்பை உள்ளடக்கியது.


Pengarang :