NATIONAL

கோலாலம்பூர் உட்பட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஷா ஆலம், ஜன 8: கோலாலம்பூர் உட்பட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவை சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபாவில் உள்ள சில பகுதிகளிலும் இதே வானிலை தான் இருக்கக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :