ALAM SEKITAR & CUACASELANGOR

சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய மழை

ஷா ஆலம், ஜன. 11: சிலாங்கூரில் சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதே வானிலை தான் பேராக், பகாங் மற்றும் திரங்கானுவில் உள்ள பகுதிகளிலும் ஏற்படும் என முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும்  மேலாகப் பெய்யும் என எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் மேலும் உறுதியான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது  myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :