NATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 380ஆக குறைந்தது- 9 பேர் மரணம்

ஷா ஆலம், ஜன 11- நாடு முழுவதும் நேற்று 380 கோவிட்-19 நோய்த்
தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 11 வெளிநாடுகளிலிருந்து
வந்தவர்கள் மூலம் பரவியவையாகும்.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒன்பது மரணச்
சம்பவங்கள் நேற்று பதிவானதாக சுகாதார அமைச்சின் கே.கே.எம்.நாவ்
அகப்பக்கம் கூறியது.

இதனுடன் சேர்ந்து நாட்டில் அந்த நோய்த் தொற்றினால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,892ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே நாட்டில் 11,412 பேர் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தை
இன்னும் எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 10,844 பேர் அல்லது 95
விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 542 பேர் கோவிட்-19 நோய்க்காக மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
சேர்க்கப்பட்டுள்ள வேளையில் 11 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி
பொருத்தப்பட்டுள்ளது.


Pengarang :