NATIONAL

வெள்ளை நிற சாக்கு மூட்டையில் ஆடவர் சடலம்- கிள்ளானில் கண்டுபிடிப்பு

ஷா ஆலம், ஜன 13- கிள்ளான், அமான் பெர்டானா சாலையோரம்
வெள்ளை நிற சாக்கு மூட்டையில் ஆடவர் ஒருவரின் சடலம் அழுகிய
நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

தாமான் பெர்டானா, ஜாலான் பெர்சியாரான் அமான் பெர்டனா 1
சாலையோரம் வெள்ளை நிற சாக்கு மூட்டையில் ஆடவரின் சடலம்
கிடப்பது தொடர்பில் பொது மக்களிடமிருந்து தாங்கள் நேற்று மாலை 6.10
மணியளவில் புகாரைப் பெற்றதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி எஸ்.விஜய ராவ் கூறினார்.

சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த அந்த சடலம் அழுகும் நிலையில்
காணப்பட்டதோடு இறந்தவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதை
கண்டறிய முடியவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த சடலத்தில் மேல் சட்டையின்றி நீல கைலி மட்டும் காணப்பட்டது.
பரிசோதனைக்காக அச்சடலம் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டுச்
செல்லப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க
வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இச்சம்பவம்
தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும்
சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் 012-4071452 அல்லது 03-
32912222 (வட கிள்ளான் போலீஸ் தலைமையகம்) என்ற எண்களில்
அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு
அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :