SELANGOR

காரிலிருந்து குப்பைகளை வெளியில் வீசினால் வெ.500 அபராதம்- ஷா ஆலம் மாநகர் மன்றம் எச்சரிக்கை

ஷா ஆலம், ஜன 13- சாலைகளில் பயணிக்கும் போது காரிலிருந்து
குப்பைகளை வெளியில் வீசினால் 500 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்
என ஷா ஆலம் மாநகர் மன்றம் எச்சரித்துள்ளது.
மாநகரில் தூய்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகர் மன்றம் தனது பேஸ்புக்
பதிவில் கூறியது.

காரின் கண்ணாடி வழியாக குப்பைகளை வெளியில் வீசுவது தடை
செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களைப் புரிவோர் கண்டு
பிடிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கட்டால் 500 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்
என அது தெரிவித்தது.

1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் (சட்டம்
133) 47(1)(இ) பிரிவின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டது.


Pengarang :