ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஜனவரி 22: சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இவ்வானிலை இருக்கக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, பேராக், பகாங், ஜொகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல மாவட்டங்களில் அதே வானிலைதான் என மெட்மலேசியா கணித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் என எச்சரிக்கைகள் வழங்கப் படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லதுmyCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :