SELANGOR

ஜெலஜா எஹ்சான் ரக்யாட் திட்டத்தில் எஸ்ஓபி நடைமுறை அவ்வப்போது மேம்படுத்தப்படுகிறது

அம்பாங் ஜெயா, பிப் 5: கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஜெலஜா எஹ்சான் ரக்யாட் திட்டத்தை ஏற்பாடு செய்யும் இடத்தில், எஸ்ஓபி நடைமுறையை மாநில அரசு அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது.

வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு சிறப்பு பாதையுடன் கூடுதலாக நாற்காலிகள் மற்றும் கூடாரங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்திருப்பதாக விவசாயத் துறையின் எஸ்கோவால் தெரிவிக்கப்பட்டது.

“உண்மையில், நாங்கள் முன்பு இருந்ததை விட எஸ்ஓபி நடைமுறையை மேம்படுத்தியுள்ளோம்; காரணம் காலை 10 மணிக்கு விற்பனை கவுண்டர் திறக்கப்பட்டாலும், மக்கள் சீக்கிரம் வந்துவிடுகின்றனர். இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவது சற்று கடினம் ஆகும்.

“கடந்த ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில், இந்த விற்பனையைக் காலை 10 மணிக்குத் தொடங்குவது பொருத்தமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் சீக்கிரம் விற்பனையைத் தொடங்கினால் சில பொருட்கள் சரியான நேரத்திற்கு வராத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், எதிர்காலத்தில் வேறு என்ன முன்னேற்றங்களை செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :