NATIONAL

அந்நிய நாட்டினரை வேலைக்கமர்த்தியக் கடைகள் மீது காவல் துறை, எம்.பி.ஏ.ஜே. சோதனை- அறுவர் கைது

ஷா ஆலம், பிப் 8- வணிக மையங்கள் மீது காவல் துறை மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் நேற்று மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஆறு அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

சொந்தமாக வர்த்தகத்தில் ஈடுபடும் மற்றும் வர்த்தக மையங்களில் வேலை செய்யும் அந்நிய நாட்டினரை இலக்காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

லைசென்ஸ் விதிகளை மீறி செயல்படும் வர்த்தக ஸ்தாபனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் கூறியது.

இச்சோதனையின் போது 2007ஆம் ஆண்டு (எம்.பி.ஏ.ஜே.) வர்த்தக மற்றும் தொழில்துறை லைசென்ஸ் துணைச் சட்டத்தின் 4(4)(சி) பிரிவின் கீழ் நான்கு வணிக மையங்களுக்குச் சீல் வைக்கப்பட்டதாக அது தெரிவித்தது.


Pengarang :