ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், பிப் 14: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் இதே வானிலைதான் இருக்கக்கூடும் என  மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) கணித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் (மி.மீ./மணி) அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :