ஷா ஆலம், பிப் 27: இந்த ஆண்டு கிள்ளான் நகராட்சி (MPK) சமூகத்திற்கான அடிப்படை சேவைகளின் தரத்தை மேம்படுத்தி, குறிப்பாக திடக்கழிவு அகற்றுதல் மற்றும் பொது இட சுத்தம் பராமரிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி மாநகர அந்தஸ்தை அடைய உள்ளூர் அதிகார சபையின் (PBT) திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என்று யாங் டி பெர்துவான் நோரைனி ரோஸ்லான் கூறினார்.
மேலும் உள்கட்டமைப்பு பராமரித்தல், இயற்கையை ரசிக்கும் அம்சங்களை வலியுறுத்துதல் மற்றும் அவ்வபோது சட்ட அமலாக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளின் மீதும் கவனம் செலுத்தப்படும்.
“கிள்ளான் ஒரு முழுமையான மற்றும் நவீன நகரமாகவும், சிலாங்கூர் மற்றும் மலேசியாவின் வளர்ச்சியடைந்த நகரமாகவும், வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் முன்மாதிரியாகவும் மாற முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது,“ என்றார்.
“செழுமையான, தூய்மையான மற்றும் அமைதியான நகரமாகக் கிள்ளானை மாற்ற, கிள்ளான் எம்.பி.கே.யுடன் ஒன்றிணையுங்கள்” என்று பொது மக்களை அழைத்தார்.