NATIONAL

சபா யாங்டி பெர்த்துவா நெகிரியுடன் பிரதமர் சந்திப்பு

கோத்தா கினாபாலு, மார்ச் 1 - சபா யாங் டிபெர்டுவா நெகிரி துன் ஜுஹார் 
மஹிருடின் இன்று இஸ்தானா செரி கினாபாலுவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் 
இப்ராஹிமை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

பிரதமர் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் காலை 9.30 மணியளவில் இஸ்தானா ஸ்ரீ கினாபாலுவுக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் பிரமுகர்களுக்கான பிரத்தியேக மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் அன்வார் மற்றும் டாக்டர் வான் அஸிசா ஆகியோர் வருகையாளர்கள் 
புத்தகத்தில் கையெழுத்திட்டனர். துன் ஜுஹார் மற்றும் அவரது மனைவி டோ புவான் நார்லிடா ஆர்எம் ஜஸ்னி ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

பின்னர் ஜூஹார் பிரதமருடன் 35 நிமிடம் சந்திப்பு நடத்தினார். ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டப் பின்னர் இரு தலைவர்களும் நடத்தும் முதல் சந்திப்பு இதுவாகும்.

Pengarang :