ALAM SEKITAR & CUACANATIONAL

பகாங் மற்றும் ஜொகூரில் அபாயகரமான அளவில் கனமழை

கோலாலம்பூர், மார்ச் 5: இன்று முழுவதும் அபாயகரமான அளவில் மிக மோசமான கனமழை பகாங் மற்றும் ஜொகூரில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு 9.50 மணி அளவில் மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) விடுத்த எச்சரிக்கை யின்படி, பகாங்கில் ரோம்பின் மற்றும் ஜொகூரில் செகாமட், குளுவாங், மெர்சிங் ஆகிய இடங்களில் மோசமான வானிலை தொடரும்.

மேலும், ஜொகூர், பகாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் தொடர் கனமழை பெய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது. இதனால், தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப் படும் என கணிக்கப் பட்டுள்ளது

– பெர்னாமா


Pengarang :