ALAM SEKITAR & CUACANATIONAL

நாளை வரை சரவாக்கில் கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 5: நாளை வரை சரவாக்கில் (கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான், பெதோங்) ஆகிய இடங்களில் மோசமான அளவில் தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்மலேசியா இன்று காலை 10.35 மணி அளவில் தொடர்ச்சியான கனமழை எச்சரிக்கையை வெளியிட்டது. நாளை சரவாக்கில் உள்ள பெதோங் சரிகேய், சிபு மற்றும் முக்கா ஆகிய இடங்களில் மோசமான வானிலை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பகாங்கில் (குவாந்தன், பெக்கான், ரொம்பின்) மற்றும் ஜொகூரில் (குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி) ஆகிய இடங்களிலும் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :