SELANGOR

மந்திரி புசார் பொதுமக்களிடம் நலன் விசாரிக்க நேரம் எடுத்துக் கொண்டார்

சிப்பாங், மார்ச் 11: டத்தோ மந்திரி புசார் இன்று காலை தாமான் புத்ரா பெர்டானாவில் உள்ள டாபூர் கம்போங் உணவகத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து காலை உணவு உண்டார்.

ஏறக்குறைய 30 நிமிடங்கள் அவர் அங்குள்ள மக்களிடம் அளவளாவியதுடன், அவருக்கு டாபூர் கம்போங் உணவகத்தின் பிரபலமான மெனுவான நாசி லெமாக் சம்பல் சோத்தோங் பறிமாறப்பட்டது.

சிப்பாங் மாநகராட்சி தலைவர் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைனுடன் வந்திருந்த அவர், பொது மக்களுடன் பழகுவதற்கும் அவர்களை நலம் விசாரிக்கவும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். பல செல்ஃபி  புகைப்பட விரும்பிகள், மந்திரி புசாருடன் செல்ஃபி எடுக்கவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டனர்.


Pengarang :