SELANGOR

ஜெலஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடரும்

ஷா ஆலம், ஏப்ரல் 20: மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ஜெலஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்ச்சி ஏப்ரல் 28 அன்று ஹரி ராயா கொண்டாட்டத்தின் முதல் வாரத்தில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடரும்.

இந் நிகழ்ச்சி சிப்பாங்கில் உள்ள பெக்கான் சலாக்கில் உள்ள காலை சந்தை தளத்தில் தொடங்கி, மே 14 வரை பிற இடங்களில் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஏப்ரல் 30ஆம் தேதி கிள்ளான், பாடாங் தாமான் ஸ்ரீ கெராயோங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் மற்றும் ரெவாங் செகம்போங் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநிலத் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஏப்ரல் 29ஆம் தேதி உலு சிலாங்கூரில் உள்ள உலு பெர்ணம் பொதுப் பூங்காவிலும், பின்னர் மே 5ஆம் தேதி உலு லங்காட்டில் உள்ள தாமான் ஸ்ரீ நன்டிங், அகோரா இரவு சந்தை தளத்திலும் இந்நிகழ்ச்சி தொடரும்.


Pengarang :