தொழுகையின் போது மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்

பாடாங் தெராப், ஏப் 23- இங்குள்ள மஸ்ஜிட் தண்டோப் பள்ளிவாசலில் நேற்று நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டிருந்த  மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

திடீரென சுயநினைவை இழந்த  அந்த மூதாட்டியை பொதுமக்கள் உடனடியாக கோல நெராங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றதாக பாடாங் தெராப் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்ரிண்டெண்டன் முல்கியாமான் மன்சோர் கூறினார்.

மருத்துவமனையில் அம்மூதாட்டியை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த மூதாட்டி இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது அவரின் மகன் மூலம் தெரிய வந்ததாக கூறிய அவர், இந்த மரணத்தில் குற்றத்தன்மை எதுவும் காணப்படவில்லை என்றார்.


Pengarang :