NATIONAL

எஸ்.பி.ஆர்.எம். அகாடமி நிலச்சரிவு- பாதிக்கப்பட்ட பகுதியில் நீர் விநியோகம் துண்டிப்பு

ஷா ஆலம், ஏப் 27- தொடர் நிலச்சரிவைத் தடுப்பதற்காக தலைநகர் புக்கிட்
துங்கு, பெர்சியரான் துங்கு சைட் சிராஜூடினில் உள்ள மலேசிய ஊழல்
தடுப்பு ஆணைய அகாடமிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் நீர் வழிந்தோடுவதைத் தடுப்பதற்காகவும்
விசாரணையை எளிதாக மேற்கொள்ளும் நோக்கிலும் இந்நடவடிக்கை
எடுக்கப்படுள்ளதாகப் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

பாதிக்கப்பட்ட பகுதியில் நிலச்சரிவு விரிவடையும் சாத்தியத்தைக்
கருத்தில் கொண்டு கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு
வால்வுகளைப் பொருத்தும பணியும் மேற்கொள்ளப்படுகிறது என அது
தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இந்த நிலச்சரிவுக்கு அந்த அகாடமியின் வேலியின் அருகே நீர்
தேங்கியிருந்தது மற்றும் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குழாய்
உடைந்தது ஆகியவையும் காரணமாக விளங்குவதாக செந்தூல் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி பே எங் லாய் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :