NATIONAL

சிலாங்கூரில் உள்ள மூன்று மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஏப்ரல் 23: சிலாங்கூரில் உள்ள உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோலாலம்பூர், பெர்லிஸ், பினாங்கு மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இதே வானிலை கெடா, பேராக், கிளந்தான், பகாங், ஜொகூர், சரவாக் மற்றும் சபா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களிலும் நிகழும்.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணிக்கு) மேல் மழை பெய்யும் . இடியுடன் கூடிய கனமழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :