NATIONAL

சிலாங்கூரில் உள்ள 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஜூன் 1: சிலாங்கூரில் உள்ள கோலா சிலாங்கூர், உலு
சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட்
ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய
கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், பேராக், திரங்கானு, பகாங், ஜொகூர் மற்றும் சரவாக்
ஆகிய மாநிலங்களில் உள்ள சில பகுதிகளிலும் இதே வானிலை
ஏற்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)
முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை
பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள்
தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்
மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது
அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு
என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள்
http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது
myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :