ANTARABANGSA

இந்தோனேசியாவின் கிழக்கே நிலநடுக்கம்

ஜாகார்த்தா, ஜூன் 4 – இந்தோனேசியாவின் கிழக்கு மாநிலமான மலுகுவில் இன்று காலை 6.0 என ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏற்படவில்லை என்று அது கூறியது.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 07.25 மணிக்கு

ஏற்பட்டதாகவும் கெபுலாவான் தனிம்பார் (மலுகு தெங்கரா பராட்) மாவட்டத்திற்கு வடமேற்கே 154 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 153 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம்  மையமிட்டு இருந்ததாகவும் சின்ஹுவா நிறுவனம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் ராட்சத அலைகள் ஏற்படும் அபாயம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :