SELANGOR

மக்கள் குடியிருப்பு திட்டத்தில் (பிபிஆர்) வெள்ளை அடிக்கும் பணி மாநிலத் தேர்தலுக்குப் பிறகும் தொடரும் – சுபாங் பள்ளத்தாக்கு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20: மக்கள் குடியிருப்புத் திட்டமான (பிபிஆர்) ‘லெம்பா சுபாங் ’ வெள்ளை அடிக்கும் பணி மாநிலத் தேர்தலுக்குப் பிறகும் (பிஆர்என்) தொடரும்.

“சில மாதங்களுக்கு முன்பு பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சீன் சுங் மற்றும் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சகம் (கேபிகேடி) ஆகியோருடனான சந்திப்பு மற்றும் பல கலந்துரையாடல்கள் விளைவாக ‘லெம்பா சுபாங் 1 மற்றும் 2’  இல் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க எங்களுக்கு சாதகமான பதில் கிடைத்தது.

ஶ்ரீ செத்தியா மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADN), குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கான இக்குடியிருப்பு பகுதியில் வெளிநாட்டினர் மற்றும் வசதியானவர்களும் வசிப்பதே இந்நடவடிக்கை குக் காரணமாகும் என்றார்.

“கேபிகேடி துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் இந்த வெள்ளிக்கிழமை சுபாங் பள்ளத்தாக்குக்கு வரவுள்ளார். இதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று ஹலிமி அபு பக்கர் கூறினார்.

ஶ்ரீ செத்தியா தொகுதியை இரண்டாவது முறையாகத் தக்க வைப்பதில் வெற்றி பெற்றால், சுபாங் பள்ளத்தாக்கு 1 மற்றும் 2 இல் உள்ள சில சிக்கல்களைத் தீர்க்க கேபிகேடி தொடர்ந்து உதவும் என்பது அவரது நம்பிக்கை தெரிவித்தார்.

“குடியேற்றம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பிரச்சனைகளை தீர்ப்பது இதில் அடங்கும். இதை செயல்படுத்த உள்ளூர் அதிகாரிகள் (PBT) உட்பட பல தரப்பினரின் உறுதியான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :