ANTARABANGSA

பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி உயிரிழந்தார்

மலாக்கா, ஜூலை 21: இங்குள்ள இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி (படிவம் ஒன்று) ஒருவர் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

பள்ளி கட்டிடத்தின் நடைபாதையில் தோட்டக்காரரால் மதியம் 2.31 மணியளவில் அம்மாணவி கண்டுபிடிக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாதித் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் வகுப்பறை மூன்று மாடி பள்ளி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

“பள்ளியின் இரண்டாவது மாடியின் நடைபாதையில் அம்மாணவியின் காலணிகளைப் புலனாய்வுக் குழு கண்டுபிடித்ததை அடுத்து, கட்டிடத்தின் இரண்டாவது மாடியில்தான் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

“பாதிக்கப்பட்ட மாணவி விழுந்ததைக் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை, மேலும் அப்பகுதியில் குற்றச் செயல்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அம்மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :