SELANGOR

இன்று இரவு டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடனான கேள்வி – பதில் அங்கம் இடம்பெறும்

ஷா ஆலம், ஜூலை 24: இன்று இரவு செக்‌ஷன் 15 உள்ள டேவான்
கரங்க்ராஃப்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரியுடனான ஒரு பொது உரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சினார் ஹரியான் தொகுத்து வழங்கும் இந் நிகழ்ச்சி இரவு 8.30
மணிக்குத் தொடங்கும். இதில் உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பாக
மாநில தலைவர்களுடன் கேள்வி – பதில் அங்கம் இடம்பெறும்.

இந்த அமர்வு பிரபல நடிகர் அசார் சுலைமான் அவர்களால் நடத்தப்படும்.
மேலும், இதை www.sinarharian.com.my என்ற இணைப்பில் பார்க்கலாம்.

நாட்டின் தற்போதைய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளூர் தலைவர்கள்
மற்றும் கல்வியாளர்கள் இடம்பெறும் நிகழ்ச்சியை சினார் ஹரியான்
வழக்கமாக ஏற்பாடு செய்கிறது.


Pengarang :