ஷா ஆலம், ஆகஸ்ட் 9: ஐடியல் கன்வென்ஷன் சென்டரில் (ஐடிசிசி) மாநில அளவிலான மனித மூலதனம் மற்றும் ஆளுமை மேம்பாட்டுக் கருத்தரங்கில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கலந்து கொண்டார்.
காவல்துறை மற்றும் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தொகுத்து வழங்கினார். காவல் கண்காணிப்பாளர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைனும் உடனிருந்தார்.
காலை முதல் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உயர் காவல்துறை தலைமையிடமான கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், இணைய மோசடி மற்றும் பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல சிக்கல்கள் பற்றி பங்கேற்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகளாக மற்றும் சீருடை பணியாளர்களின் பணியைக் குறித்தும் அவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.