NATIONAL

உலு லங்காட் மாவட்டத்தில் மாலை வரை இடியுடன் கூடிய மழை

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: சிலாங்கூரில் உலு லங்காட் மாவட்டத்தில்
மாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த
காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம்
(மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள
பல மாவட்டங்களிலும் இதே வானிலைதான் நிலவும் என்று
கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை
பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள்
தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்
மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது
அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு
என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.me
t.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்
பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :