GALERIMEDIA STATEMENTNATIONAL

விமான விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: ஷா ஆலம் செக்சன்  U16 ல் உள்ள எல்மினா சென்ட்ரலில் இன்று நடந்த  விமான விபத்தில் முக்கிய பிரமுகர்கள் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விமானத்தில் இருந்த இரண்டு பணியாளர்கள் மற்றும் ஆறு பயணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கார் ஓட்டுனர் ஆகியோர் கொல்லப்பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மேலாண்மைக் கிளையின் தலைவர் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், மொஹமட் ஷோகி ஹம்சாவைத் தொடர்பு கொண்டபோது, காரில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான காவல்துறை தகவலுக்காக அவரது தரப்பு இன்னும் காத்திருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் இன்று மதியம் 5.15 மணி நிலவரப்படி, சம்பவத்தில் 10 பேர் மட்டுமே இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

முன்னதாக, ஷா ஆலம் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம், இங்கு அருகில் உள்ள பண்டார் எல்மினாவில் குடியிருப்பு பகுதிக்கு அருகே ஒரு விமானம் சாலையில் விழுந்து நொறுங்கியதாக கூறினார்.

மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, விமானம் லங்காவி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.08 மணிக்கு சுபாங்கி ல் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

சுபாங் கட்டுப்பாட்டு கோபுரம் மதியம் 2.48 மணிக்கு தரையிறங்க அனுமதி வழங்கியதாகவும் ஆனால் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து மூன்று நிமிடங்களுக்குப் பிறகு புகை காணப்பட்டதாகவும் டத்தோ கேப்டன் நோரஸ்மான் மஹ்மூட் விளக்கினார். எனினும், விமானம் மூலம் அவசர அழைப்பு எதுவும் பெறப்படவில்லை  என்றார்.


Pengarang :