SELANGOR

மூன்று இடங்களில் நாளை ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், அக் 3- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை
மேலும் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளன.

பந்திங் தொகுதி நிலையிலான விற்பனை பந்திங் தொகுதி மக்கள் சேவை
மைய அலுவலகத்திலும் பத்து தீகா தொகுதி நிலையிலான விற்பனை
பாடாங் ஜாவா, செக்சன் 17, கெராய் எம்.பி.எஸ்.எ. வளாகத்திலும் சுங்கை
துவா தொகுதி நிலையிலான விற்பனை பத்து கேவ்ஸ் பொது
மைதானத்திலும் நாளை காலை 10.00 தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை
இந்த மலிவு விற்பனை நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம்
முழுவதும் 2,850 இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின்
வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு
விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக
பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.


Pengarang :