NATIONAL

உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக்கில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், அக்.26: உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக்கில் இரவு 7 மணி வரை இடியுடன்
கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)
எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இதே வானிலைதான் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான்,
திராங்கானு, பகாங், ஜொகூர், லாபுவான், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும்
நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்
மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது
அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால
எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள்
http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது
myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :