SELANGOR

வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு எம்.பி.ஐ. உதவி

ஷா ஆலம், நவ 6 – வெள்ளம் காரணமாக மூன்று தற்காலிக நிவாரண
மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர்
மந்திரி பெசார் கழகம் தொடக்கக் கட்ட உதவிகளை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு துயர் துடைப்பு மையத்திற்கும் தலா 10 கார்ட்டன் குடிநீர், ஐந்து
பொட்டலங்களில் உலர் உணவு வகைகள் மற்றும் 20 படுக்கை விரிப்புகள்
வழங்கப்பட்டதாக எம்.பி.ஐ. நிறுவனக் கடப்பாடு மற்றும் வர்த்தகத்
தொடர்புப் பிரிவு தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

பெட்டாலிங் மற்றும் சிப்பாங் மாவட்டங்களில் 119 குடும்பங்களைச் சேர்ந்த
145 பேர் தங்கியிருக்கும் மேலும் நான்கு துயர் துடைப்பு மையங்களுக்கு
இதே போன்ற உதவிப் பொருள்கள் இன்று விநியோகிக்கப்படும் என அவர்
தெரிவித்தார்.

கம்போங் டத்தோ அகமது ரசாலி சமூக மண்டபம், கம்போங்
ஜெண்டாரோம் ஹிலிர் சமூக மண்டபம், டெங்கில் தேசிய பள்ளி மற்றும்
கெமிலியா ஹைட் சமூக மண்டபம் ஆகிய இடங்களில் அவர்கள்
தங்கியுள்ளனர் என்று அவர் சொன்னார்.

உலு லங்காட், சிப்பாங் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில்
நேற்று பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 157
குடும்பங்களைச் சேர்ந்த 579 பேர் தற்காலிக நிவாரண மையங்களில்
அடைக்கம் புகுந்தனர்.


Pengarang :