காஸா/தி ஹேக், ஜன 12 – காஸாவில் நிகழ்ந்த போரில் இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் அனைத்துலக நீதிமன்றத்
காஸாவின் வட பகுதியிலிருந்து இஸ்ரேல் தனது படைகளை மீட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், குடியிருப்பாளர்கள் அப்பகுதிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். அப்பகுதி அழிவின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது.
இஸ்ரேலின் மூன்று மாத கால தொடர்ச்சியான குண்டு வீச்சுத் தாக்குதல் குறுகிய கடலோரப் அந்த பகுதிகளை நிர்மூலமாக்கியுள்ளதோடு 23,000 க்கும் அதிகமான மக்களையும் பலிகொண்டுள்ளது.
மேலும், கிட்டத்தட்ட 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்.
காஸாவை ஆளும் இஸ்லாமியக் குழுவான ஹமாஸை ஒழிப்பதே தங்களின் தலையாய நோக்கம் என்று இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலின் அழிவுக்கு சபதமேற்றுள்ள ஹமாஸ் போராளிகள் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200 பேரைக் கொன்றதோடு 240 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்தனர்.
தி ஹேக்கில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ள தென்னாப்பிரிக்கா,